Thursday, February 11, 2010

ஒரு மகனை பற்றிய தந்தையின் கனவு

கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே

கனவெல்லாம்  பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோலை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனம் இன்று பறந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக
பூ பூத்து சிரிக்கின்றதே எங்கே எங்கே
என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அதுவரையில்
எந்நாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அங்கம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே...

ஒவ்வொரு தந்தையும் பிள்ளையின் எதிகாலத்தியும், எதிர்காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் வெற்றி நடைபோட வேண்டுமென்று
கனவு கண்டு அந்த கனவு பலிக்கும் பட்சத்தில் அவர்களது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இப்பாடலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்தால் சந்தோசம் நிட்சயமென்பதை உறக்க சொல்லி நன்றியுடன் என் வலைப்பக்கத்தில் பதிவு செய்கிறேன்
உங்கள் பரவை அசோக்குமார்
நன்றி வணக்கம்