Thursday, February 11, 2010

ஒரு மகனை பற்றிய தந்தையின் கனவு

கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
கனவெல்லாம் பலிக்குதே!
கண்முன்னே நடக்குதே!
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே

கனவெல்லாம்  பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோலை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனம் இன்று பறந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக
பூ பூத்து சிரிக்கின்றதே எங்கே எங்கே
என்று தினம்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அதுவரையில்
எந்நாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அங்கம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம்தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே...

ஒவ்வொரு தந்தையும் பிள்ளையின் எதிகாலத்தியும், எதிர்காலத்தில் அவர்கள் எப்படியெல்லாம் வெற்றி நடைபோட வேண்டுமென்று
கனவு கண்டு அந்த கனவு பலிக்கும் பட்சத்தில் அவர்களது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இப்பாடலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்தால் சந்தோசம் நிட்சயமென்பதை உறக்க சொல்லி நன்றியுடன் என் வலைப்பக்கத்தில் பதிவு செய்கிறேன்
உங்கள் பரவை அசோக்குமார்
நன்றி வணக்கம்

Wednesday, January 13, 2010

சிங்கையிலே பொங்க‌ல்.

சிங்கையிலே!

சிராங்கூன் வீதியிலே!
குட்டி இந்தியா
க‌டைத் தொகுதியிலே!
பொழுது புல‌ரும் வேளையிலே!
பொங்கி வ‌ரும்
பொங்க‌லே!


பொங்க‌ல் சீருகொண்டு வ‌ந்தோம்
பொங்க‌ சோறும் பொங்கிவ‌ந்தோம்
க‌ரும்புத்துண்டும் வெட்டி வ‌ந்தோம்
கூட‌ ஒரு
க‌விதையொன்றும் ப‌டைத்து வ‌ந்தேன்!


விவ‌சாயி ம‌க‌னாய் நான் பிற‌ந்தேன்
விவ‌சாய‌ம் செய்து வாழ்ந்தேன்
விவ‌சாய‌த்துக்கு விடைகொடுத்து
க‌ட்டுமான‌ம் க‌ற்ற‌றிந்தேன்
க‌ட்டுமான‌ தொழில் தேடி
சிங்கை வ‌ந்தேன்


உற‌வுக‌ளோ அங்கிருக்க‍ - என்
உழுத‌ நில‌மும் அங்கிருக்க‌
பெத்த‌வ‌ளின் பாச‌ம் என்னை
அங்கிழுக்க‌ ப‌ண‌ம்
என்னை இங்கிழுக்க‌
பாச‌மா ப‌ண‌மா
என்ற‌ போட்டியிலே ப‌ண‌ம் (த‌ற்காலிக‌ம்) ஜெயிக்க‌


மாட்டுக் கொம்பிலே சாய‌ம் த‌ட‌வி
மாலையிட்டு ம‌னிக‌ட்டி
கட்டிள‌ங்காளைக‌ளை
அவிழ்த்துவிட்டு
வீர‌ம் பொங்க‌ விர‌ட்டிவ‌ர‌
வீதியில்லை சிங்கையிலே
எங்க‌ளுக்கு வேறு வ‌ழியுமில்லை
சிங‌கையிலே

காளையின்றி பொங்க‌லா?
வீர‌மின்றி உழ‌வ‌ர் திருநாளா?
வினா வ‌ந்து போகுமுன்னே
சிங்கார‌ சிங்கையிலே
சின்ஞ்சிறு ப‌குதியிலே
சிங்கைத் த‌மிழ‌ரின்
ஏற்ப்பாட்டிலே

க‌ட்ட‌வ‌ண்டி ஒன்னு வ‌ச்சு
ப‌சுக்க‌ளை ப‌க்க‌த்தில் வ‌ச்சு
அம்மாவுக்கும் அடுத்த‌ப‌டியா
ஆடுக‌ளை அம‌ர்த்தி அழ‌கு பார்த்து



வீர‌மா காளிய‌ம்ம‌ன் கோவிலிலே
பொங்க‌லிட்டு - கேம்ப‌ல் வீதியிலே
ப‌டைய‌லிட்டு
இங்கே கூடியிருக்கும்
அன்ப‌ருக்கும் கொடுத்து
கொண்டாடுவோம்
பொங்க‌ல் திருநாளை

தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
நாட்டை விட்டு, வீட்டை விட்டு
தொலைதூர‌ம் வ‌ந்துவிட்டோம்
தொலைந்துபோய் நிற்கின்றோம் - ஆனாலும்
தொப்புள் கொடி உற‌வான‌தால்
உன்னை ம‌ற்க்க‌முடிய‌வில்லை
தாய்(ம‌ண்ணை) ம‌ற‌க்க‌முடிய‌வில்லை

என‌த‌ருமை தாய் ம‌ண்ணே - த‌மிழ் ம‌ண்ணே
செம்மொழி புக‌ழ் பெற்று
சிற‌ந்தோங்கி புக‌ழ்பாடும்
உன்பெய‌ரால் (த‌மிழ‌ரென்று) கூடியுள்ளோம்
பொங்க‌ல் வைத்துக் கொண்டாட‌!

பொங்க‌லோ பொங்க‌ல்.
பொங்க‌லோ பொங்க‌ல்.

ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி


த‌மிழ் வ‌ண‌க்க‌த்துட‌ன்
உங்க‌ள் ப‌ர‌வை அசோக்குமார்

Friday, August 28, 2009

பரவைஅசோக்குமாரின் விருப்பப்பாடல்

காத்துக்கு பூக்கள் சொந்தம்

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
ஓ... கோ... கோ கோ ஓ.. ஓ.. ஓ.. கோ..கோ..கோ..ஓ..ஓ..கோ..

தாலாட்டு கேட்கவுமில்லை தாய் பாசம் பார்த்ததுமில்லை எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா, ஏ... நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா

பத்துவிரலும் எனக்குமாத்திரம் புல்லாங்குழலா மாற வேணுமே எந்தச்சாமி எனக்கு அந்த வரங்கொடுக்கும். நல்லா வரங்கொடுக்கும்,

மீனாய் மாறி நீரில் நீந்தனும் குயிலாய் மாறி விண்ணில் பறக்கணும்,
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணைவேணும்

சாமி சிலைகள் நூருஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ண முழுச்சு பாத்திடுமா அவளை காட்டிடுமா...

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா,,

மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதுலே சேலை நெய்யனும், யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே!

நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டனும் யாருக்குன்னு நிலவே கேட்காதே எனக்கே தெரியாதே!

மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டனும் யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே நெசமா தெரியாதே…

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே….. உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம்
சொல்லித்த ருவாளே....

Thursday, August 27, 2009

பரவை அசோக்குமாரின் புதிய உறவு,

புதிய உறவு,

எனக்காக வந்தவள் நீ!
உனக்காக வந்தவன் நான்
எனக்காக வாழ்பவள் நீ!
உனக்காக வாழ்பவன் நான்
எனக்காக அர்ப்பணிப்பாய் உன்னை!
உனக்காக அர்ப்பணிப்பேன் என்னை!
எனக்காக தாண்டத் துடிப்பாய் வாழ்வின் எல்லையை!
உனக்காக தாண்டுவேன் உலகத்தின் (உயிரின்) எல்லையை!
என்னக்கென வாழ்வதில் சுகம் காண்பாய்!
உனக்கென வாழ்வதே சுகமேன்பேன்!
எனக்கென பிறந்தவள் நீ!
உனக்கென பிறந்தவன் நான்!
என்னுள் விதைக்கப்பட்டவள் நீ!
உன்னுள் மலர்ந்துகொண்டிருப்பவன் நான்
என்னுள் மலர்ந்த மலரின் மகாரந்தம் நீ!
உன்னுள் மலரும் மலர் நான்!
உலகின் உயரத்தை அலர்ந்து பார்ப்போம் வா என்னோடு!
வாழ்வின் எல்லைவரை அழைத்துச்செல்வேன் அன்போடு!
ஆரம்பமாய் தொடர்ந்த நம் அன்பெய் ஆழி பேரலையும் அசைக்காது,
உயிரோடு கலந்துவிட்டோம் பிரிக்கமுடியாது இனி!
பிரிக்கமுடியா கலவைதான் நம் உறவு,
வாழ்க்கையின் பாதி நாட்களில் உண்டான
இந்த புதிய உறவு!
வாழ்க்கையின் இறுதி வரை தொடரும்
புதிய உறவு!

நன்றி வணக்கம்
உங்கள் பரவை அசோக்குமார்
சிங்கப்பூர்

Friday, August 21, 2009

கவிதை

கஞ்சி கொண்டு போறவளே

கால கருக்கலிலே கஞ்சி கொண்டு போறபுள்ள என்ன கஞ்சி கொண்டு போர
கருத்த மச்சான் காத்திருக்கன்!
கால கருக்கலிலே கம்மங்கஞ்சி கொண்டு போறேன் கருத்த மச்சான் காத்திருக்க!
கால் நடையா கொண்டு போறேன்!
கருத்த கஞ்சிகலயத்தில் என்னென்ன
கொண்டு போற கமகமன்னு கவர்ந்தென்னை இழுக்குதடி,
கத்திரிக்காய் நெய் சேர்த்து கருவாட்டு கொழம்பும், கதகதன்னு கொதிக்கவச்ச கம்மங்க்கூழும் சும்மா கவர்ந்திழுக்கும் பார்த்துக்கோங்க!
காலையில் கனவு வந்தா காலை வெயில் சுட்டெரிக்கும்!
கனவில்லாமல் கருத்தா களைஎடுங்க
எங்கக்கா எடுத்துவாறா எடுத்து வைச்ச
கலயத்துல எள்ளெண்ணை சேர்த்து வச்சு அருவாமனை புடுச்சு அழகழகா அறிஞ்சு வச்ச அவரக்கா கூட்டோட
அறுத்து வச்ச மாம்பழமும் ஆப்பை கொழம்பும் அதிலே வச்சு
அசைஞ்சு வாறா அந்தப்பக்கம்
அலுங்காம நலுங்காம அப்படியே சாப்பிட்டு அக்காவை அனுப்புங்க,
இல்லாட்டி எருக்கங் குச்சி எடுத்து எடுதிருவா என் எலும்பை,
அம்மாடி நா போறேன் என்காட்டுக்கு!
ஏம்மாமா எனக்காக எடுத்த கண் மாறாமல் என்னையே தேடுவார்
எம்பாட்டுக்கு நா இங்கிருந்தா கம்மங்கஞ்சியும் கருவாட்டு குழம்பும்
கடுகடுத்து போயிடும்,
காரமரத்தடியில் குளுகுளுன்னு நிழளிருக்கு எம்மாமன் எனக்காக
என்னோட கை விரல் பட்ட ருசி காண காத்திருக்கார் காலத்தோட நா போறேன்,
காலம் கடந்து குடிக்கும் கூழுக்கு சுவையில்லாமே போயிடும்!
சுவையில்லா கூழுபோல எம்மாமனுக்கு எம்மேல ஆசையில்லாட்டி போச்சுன்னா அய்யய்யோ காத்திருக்க என்னால முடியாது
காலத்தோட நா போறேன்,
கருத்தா எம்மாமனுக்கு எங்கய்யாள ஊட்டி விட்டு கட்டி முத்தம் வாங்கிகிட்டு காலத்தோட வீடுவந்தா எம்புள்ள எனக்காக காத்திருக்கும் பள்ளிக்கூடம் போகாமே பாதி பசியோட பார்த்து பார்த்து காத்திருக்கும். கட்டி அணைச்சு என் கையாள சோறுஊட்டி
பள்ளிக்கூடம் அனுப்பி வச்சு மத்தியான பசியோட எம்புருசன் வந்திருவார் காத்திருக்க நேரமில்லை களையெடுக்கும் ஏம்மாமா என்ன கலாய்ச்சது போதும் களைஎடுங்க மாமா,

வணக்கத்துடன் பரவைஅசோக்குமார்
நன்றி நன்றி!!!