Friday, August 28, 2009

பரவைஅசோக்குமாரின் விருப்பப்பாடல்

காத்துக்கு பூக்கள் சொந்தம்

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா
ஓ... கோ... கோ கோ ஓ.. ஓ.. ஓ.. கோ..கோ..கோ..ஓ..ஓ..கோ..

தாலாட்டு கேட்கவுமில்லை தாய் பாசம் பார்த்ததுமில்லை எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா, ஏ... நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா

பத்துவிரலும் எனக்குமாத்திரம் புல்லாங்குழலா மாற வேணுமே எந்தச்சாமி எனக்கு அந்த வரங்கொடுக்கும். நல்லா வரங்கொடுக்கும்,

மீனாய் மாறி நீரில் நீந்தனும் குயிலாய் மாறி விண்ணில் பறக்கணும்,
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணைவேணும்

சாமி சிலைகள் நூருஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ண முழுச்சு பாத்திடுமா அவளை காட்டிடுமா...

காத்துக்கு பூக்கள் பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா,,

மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதுலே சேலை நெய்யனும், யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே!

நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டனும் யாருக்குன்னு நிலவே கேட்காதே எனக்கே தெரியாதே!

மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டனும் யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே நெசமா தெரியாதே…

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே….. உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம்
சொல்லித்த ருவாளே....

No comments:

Post a Comment