Monday, August 17, 2009

எனது கவிதையும் காதல் மன்னன் பாடலும்

அன்பே நான் உன்னை பார்த்த நாள் முதல் உன் நினைவாகவே உள்ளேன், பசியில்லை, உறக்கமில்லை வெளியில் எந்த ஓசையும் என் காதுகளில் கேட்கவில்லை கேட்பது அனைத்தும் உன் குரல்மட்டுமே! காரணம் தெரிந்தவர்கள் காதல் என்கிறார்கள், அறிந்தவர்கள் அன்பு என்கிறார்கள், உணர்ந்தவர்கள் இன்ப வலி என்கிறார்கள். எனக்கு அவ்வப்போது வந்து போகும் இந்த வலி மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே தோன்றுகிறது, இப்போதுதான் அந்த காதல்மன்னன் நினைவில் வருகிறார், இதோ!!!உன்னைபார்த்த பின்புநான்.... நான் நானாக இல்லையே... என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே.... எவளோ எவளோ என்று நெடுநாள் நெடுநாள் இருந்தேன், இரவும் பகலும் சிந்தித்தேன், இவளே இவளே என்று இதயம் இதயம் தெளிந்தேன்... இளமை இளமை வாதித்தேன்....கொள்ளை கொண்ட அந்த நிலா... என்னை கொன்று கொன்று தின்றதே... இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....உன்னை பார்த்த பின்புநான் நான் நானாக இல்லையே....உன்னை பார்த்த பின்புநான் நான் நானாக இல்லையே ......ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன் உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்...என்னுயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்.. எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடிக்கவில்லை... இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்க சொல்வதில் ஞாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ..... தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே....நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி.. மணமகளாய் பார்த்த பின்பும் உன்னை சிறையெடுக்க மனம் துடிக்கிதடி....மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை... இமய மலையென்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை... நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ...... தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ.... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே.... எவளோ எவளோ என்று நெடுநாள் நெடுநாள் இருந்தேன் இவளே இவளே என்று இதயம் இதையம் தெளிந்தேன்... என்னை கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே.... இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே.....
இப்படி அவ்வப்போது என் மனது பாடி திரிகின்றது... உறவின் விளிம்பில் நானிருக்க நட்பு கலந்த காதல் பிறக்கிறது.... காதலுக்கு சக்தி அதிகம் என்று சொல்கிறார்கள் ஆனால் அது ஒருதள காதலுக்கு அல்ல... ஏனென்று என்னிபார்கின்ற வேளையிலே....
காதல் என்பது எதை பார்த்து வருகிறது என்ற கேள்வி இன்று பலருக்கும் வருகிறது, அப்படி பார்க்கும் பட்சத்தில் நிறைய பேர் அதை சிந்திப்பதில்லை காதல் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ பார்த்த முதல் நிமிடம் மூலையில் ஹார்மோன் சுரக்கின்றது, அது மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க அந்த ஹார்மோன் சுரக்கும் பட்சத்தில் காதல் பூ இதையத்தில் பூக்கிறது. அந்த காதல் பூ ஆண் மனதில் இருக்கலாம், அல்லது பெண் மனதில்கூட இருக்கலாம். அந்த வகையான காதல்தான் கடைசியில் காதலுக்காக உயிரைக்கூட கொடுக்க நினைக்கும் , ஒரு சில பேர் அதை புரிந்து கொள்வதில்லை மாறாக என்னிடம் என்ன அப்படி உங்களுக்கு பிடித்தது என்று கேட்டல் அதை சில பேருக்கு சொல்லத்தெரிவதில்லை
இங்கே ஒரு கவிதை.
கண்டேன் காதலை என்மீது நட்பு கொண்ட செந்தாமரையின் கண்களில்!! காதல் கண்களில் தெரிவது,! காதல் கண்களின் கவிதை மொழி! காதல் கண்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் ரகசிய தாய்மொழி!! காதல் கட்டேரும்புக்கும் கரும்புசாருக்கும்..காதல் அழகிய ரோஜாப்பூ.... காதல் இயற்கையின் தசாவதாரம்!!!!காதல் பிடித்த புத்தகத்தின்மேல்!!!காதல் பிடித்த கவிதைமேல்!!!காதல் பறவைகளிடத்தில்...காதல் மிருகங்களிடத்தில்!!!காதல் மனிதர்களிடத்தில் காதல் அன்னை பிள்ளையிடம்....காதல் பிள்ளை அன்னையிடம்!!!காதல் காதலன் காதலியிடம்!!!!காதல் காதலி காதலனிடம்!!!!அனைத்திற்கும் அஸ்திவாரம் அன்பு மட்டுமே!!!அன்பு கொண்டால் காதல் பிறக்கும்!நேசம் கொண்டால் நட்பு பிறக்கும்! பாசம் கொண்டால் உறவு பிறக்கும்!உணர்வு கொண்டால் காமம் பிறக்கும்!அன்பிற்கு காதல் மட்டுமே சாட்சி,நேசத்திற்கு நட்பு மட்டுமே சாட்சி,பாசத்திற்கு உறவு மட்டுமே சாட்சி,உணர்வுக்கு காமம் மட்டுமே சாட்சி, அன்பு வேண்டுமெனில் காதலி வேண்டும்,நேசம் வேண்டுமெனில் நட்பு வேண்டும்,பாசம் வேண்டுமெனில் உறவு வேண்டும்,உணர்வு வேண்டுமெனில் காமம் வேண்டும்.அன்பு, நேசம், பாசம், உணர்வு இவையெல்லாம் ஒன்றுகூட்டி தருபவளே காதலி (காதல்)!!!அன்பு, பாசம், நேசம், உறவினரிடத்தில் கிடைக்கும்!!!உணர்வு மட்டுமே வேண்டுமெனில் ஒரு விலைமாது போதும்!!! நான்கையும் ஓன்று சேர்த்து நம்மையும் ஆட்சிசெய்ய காதலி வேண்டும்!!!ஆகையால் காதலிப்பேன் எத்தனை யுகங்களானாலும் காதலிப்பேன்... காதலே சிறந்தது, இல்லையேல் சாதேலே சிறந்தது... என்னிப்பார் என்னவளே என்னை என்னிப்பார் என் காதலை கில்லிப்பார் அது சொல்லும் உன்பெயரை உன் பெற்றோரைவிட அதிகமுறை.... என் நெஞ்சை பிளந்து பார் என் இதயத்தில் எழுதி இருக்கும் உன்பெயர் கோடிமுறை,!!!நான் இப்பவெல்லாம் நினைக்கும் முதல் நபராக நீ இருகின்றாய், நாளெல்லாம் எத்தனைமுறை உன்னை நினைக்கிறன் என்று உனக்கு தெரியுமா?நிமிடத்திற்கு ஒருமுறை நினைக்கிறேன்!!!
காதலி
காதலி என் பல்துலக்கி நான் காலையில் எழுந்து முதலில் முத்தமிடும் எனது உடைமை!காதலி என் பேனா என் அலுவலக வேளையில் அடிக்கடி பயன்படுத்தும் என் உடைமை!காதலி என் பேனா என் சட்டைப்பையில் இருந்து கொண்டு என் இதயத்தை தொட்டு தொட்டு உரசும் ஓர் உயிரற்ற உயிரி!காதலி என் நேரம்காட்டி நான் அவ்வப்போது பார்க்கும் என் உடைமை!காதலி என் கடிகாரம் என் கரங்களை எப்பொழுதும் பற்றிகொள்ளும் என் உடைமை!காதலி என் வீட்டு கண்ணாடி நான் வெளியில் புறப்படுவதற்கு முன்பாக என்னை அதற்குள் பார்த்துவிட்டு செல்லும் என் உடைமை!காதலி என் கணினியில் உள்ள தட்டச்சு நான் அவ்வப்போது மீட்டும் வீணையாய், காதலி என் கைக்குட்டை நான் அடிக்கடி முகத்தில் ஒற்றும் என் உடைமை.
உன்னை காதலிப்பதனால் தினந்தோறும் என் பிம்பம் விழந்தே என் கண்ணாடி உடைகிறது, உனக்காக காத்திருக்கும் நிமிடங்கள் வருடமேன்பேன்!!! நீ வந்துவிட்டால் என்னருகில் நீயிருக்கும் வருடங்கள் நிமிடமேன்பேன் !!!ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும் பட்டினிகிடப்பேன்! உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையோடும் மறக்காது கண்மணியே!வாழ்வின் அர்த்தம் புரியவைத்த என்னவளே உன்னை என்னென்று சொல்வேன் என் உயிரென்று சொல்வேன்.காலத்தால் கலையாத கனவுகள் பல தந்த நீ என் காதல் கடவுளடி உன்னை நான் காதலிக்க முதல்கட்டமாக எனக்கு என்ன வேண்டும் உன் அன்பைத்தவிர...

No comments:

Post a Comment